
BCCI to announce massive pay hike for Indian domestic cricketers (Image Source: Google)
உலகின் செல்வ செழிப்பான பணக்கார கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ தான். இந்தியாவிற்காக ஆடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியத்தை கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுக்கிறது. ஐபிஎல்லில் ஆடும் வீரர்களும் கோடிகளில் புரள்கின்றனர்.
ஆனால் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் ஆடும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார ரீதியாக பின் தங்கியே இருக்கின்றனர். அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படாததால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்திய கிரிக்கெட்டில் ஊதிய அடிப்படையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது.
குறிப்பாக கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான உள்நாட்டு போட்டிகள் நடக்காததால் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் பெரும் நிதி நெருக்கடியில் இருந்தனர். இதுதொடர்பாக அவர்கள் குரல்களும் எழுப்பினர்.