Indian domestic cricket
ரஞ்சி கோப்பை தொடர் ஒத்திவைப்பு - பிசிசிஐ
இந்தியாவில் கடந்தாண்டு நடைபெற இருந்த ரஞ்சி கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது. இருப்பினும் விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி தொடர்கள் மட்டும் பார்வையாளர்களின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான உள்ளூர் போட்டிகள் குறித்து அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி முக்கிய தொடரான ரஞ்சி கோப்பை தொடர் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதிவரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.