
BCCI's WTC plan: 3 Covid-19 tests at home before players assemble in Mumbai on May 19 (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வருகிற ஜூன் 2ஆம் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படவுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா தொற்றினால், இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக இதிய வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
இந்நிலையில் இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.