
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக நியூசிலாந்து தொடரை முடித்துக்கொண்டு இங்கிலாந்து அணியும், பயிற்சி போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணியும் தயாராக உள்ளன.
கடந்தாண்டு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 - 1 என முன்னிலை பெற்றது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒரே ஒரு போட்டி மட்டும் தற்போது நடைபெறுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நியூசிலாந்தை எந்த மனநிலையுடன் வீழ்த்தினோமோ, அதே மனநிலையுடன் களமிறங்குவோம். வேறு அணிக்கென்று தனி மனநிலையெல்லாம் கிடையாது.