இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மன்கட் முறையில் ரன் அவுட் செய்திருந்தார். போட்டி முடிந்து ஒரு வாரகாலம் கடந்த போதும், அந்த விக்கெட் மீதான சர்ச்சை மட்டும் நீங்காமலேயே உள்ளது.
இங்கிலாந்து வீரர்கள், மற்றும் ஊடகங்கள் பலரும் தீப்தி சர்மாவுக்கு எதிராக விமர்சனங்களை அடுக்கி வந்தன. இதற்கு பதிலடி தரும் வகையில் நேற்று ஹர்ஷா போக்லே ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ஐசிசி விதிமுறைப்படி விக்கெட் எடுத்ததற்கு கூட இங்கிலாந்து ஊடகங்கள் விமர்சிப்பது கவலையை தருகிறது எனக்கூறியிருந்தார்.
மேலும் இங்கிலாந்துடைய கலாச்சாரமே அதுதான். உலக கிரிக்கெட்டை ஆண்டவர்கள் என்ற ஆணவம் இன்னும் அவர்களுக்குள் இருக்கிறது. இங்கிலாந்து எதை தவறு என்று சொல்கிறார்களோ நாமும் அதை தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க புத்தி இன்னும் இங்கிலாந்து பின்பற்றி வருகிறது எனவும் காட்டமாக பதிவிட்டிருந்தார்.