ஐபிஎல் 2025: பிராவோ, அஸ்வின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்! (Image Source: Google)
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை 2ஆம் தேதி நடைபெற இருக்கும் 14ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளராக அதிக விக்கெட்டுகள்