
Bio-Bubble Life Helps Players Bond Again Like Years Ago Says Shikhar Dhawan (Image Source: Google)
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி நாளை தனி விமானம் மூலம் இலங்கை செல்லவுள்ளது.
அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் இலங்கை செல்வதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஷிகர் தவான்,“ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு எங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிட சில நாள்கள் கிடைத்தன.