
Bio Bubbles Have Brought Team Together, Feels KL Rahul (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதியன்று மஹாராஷ்டிராவில் தொடங்கவுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் ராகுல். கரோனா காரணமாக வீரர்கள் அனைவரும் பயோ-பபூளில் இருந்து கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டியுள்ளது.
இந்த சீசன் முழுவதும் பயோ-பபூளில் தான் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராகுல் அதில் இருக்கும் வீரர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றம் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“தொடக்கத்தில் எல்லாம் சரியாக தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால் கடைசியாக நான் விளையாடிய இரண்டு தொடர்கள் எனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. அதுவும் என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வது மிகவும் சவாலான, கடினமான ஒன்றாக இருந்தது.