பந்தை சேதப்படுத்திய ரவி போபாராவிற்கு அபராதம்!
பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதாக சில்ஹெட் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் ரவி போபாராவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் உள்ளூர் டி20 தொடரான பங்களதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் சில்ஹெட் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டான முன்னாள் இங்கிலாந்து வீரர் ரவி போபாரா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி குல்னா டைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது ரபி போபாரா பந்தை சேதப்படுத்தியதாக போட்டி நடுவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுகுறித்து விசாரணை தொடங்கிய நிலையில் அவருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு அவர் ஒப்புக்கொண்டதை, அடுத்து அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 70 சதவிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now