WCL 2025: இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து மௌனம் கலைத்த பிரெட் லீ!
உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து ஆஸ்திரேலியவின் பிரெட் லீ தனது கருத்தை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தனா.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணி விளையாட மறுத்தனர். இதனையடுத்து இந்நிலையில் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்வதாக இத்தொடரின் ஏற்பாட்டாளர்கள் நேற்றைய தினம் அறிவித்தனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “WCL-ல் நாங்கள் எப்போதும் கிரிக்கெட்டை நேசித்து வருகிறோம், மேலும் எங்கள் ஒரே நோக்கம் ரசிகர்களுக்கு நல்ல மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை வழங்குவதாகும்.அதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைத் தொடர நினைத்தோம். ஆனால் இந்த செயல்பாடு, காரணமாக இந்திய ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
உங்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதனால் இந்த போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டது குறித்து பிரெட் லீ மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகியோர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பிரெட் லீ, “இரு நாடுகளையும் நான் நேசிக்கிறேன். எனவே அவர்கள் தங்களை மதிக்கக்கூடிய ஒரு நிலைக்கு வருவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒரு போட்டிக்காக இங்கே இருக்கிறோம். மேலும் இது நடந்து முடிந்த விஷயமாகும். எனவே நாங்கள் இந்த தொடரில் அடுத்து என்ன என்பது குறித்து முன்னோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இதையடுத்து இந்தியா சாம்பியன்ஸ் அணி தங்களுடைய இரண்டாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நார்த்தாம்ப்டனில் நாளை நடைபெறவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now