
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தள்ளிவைக்கப்பட்ட 5ஆவது டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மீதமுள்ள 5ஆவது மற்றும் கடைசி போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர், லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மாவுக்கு இன்று மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவருக்கு கரோனா பாசிட்டிவ் என்று முடிவுகள் வரவே, போட்டியிலிருந்து அவர் விலக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.