இந்தியா, ஆஷஸ் தொடரிலிருந்தும் விலகும் பட்லர்!
குழந்தை பிறப்பு காரணமாக இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இவர் தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் அறித்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லருக்கு பதிலாக நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸை அணியில் ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் இதே காரணத்திற்காக இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பட்லர், வெளிப்படையாக கூற வேண்டுமென்றால் எனது குடும்பம் எனக்கு மிகவும் முக்கியம். அவர்களைத் தாண்டி என்னால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது. ஐபிஎல் தொடரில் விளையாட எனக்கு மிகவும் பிடிக்கும்.
இருந்தாலும், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக எனது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன். ஏனெனில் எனது கிரிக்கெட் வாழ்விற்காக எனது மனைவியும், குடும்பமும் நிரையவற்றை இலந்துள்ளனர். அதனால் இத்தருணத்தில் நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஆஷஸ் தொடரில் விளையாடுவது குறித்து நான் இன்னும் எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் தெரியப்படுத்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now