
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஆல்ரவுண்டர்கள் மிகப்பெரிய கவனத்தை ஈர்ப்பார்கள் என கருதப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்தின் சாம் கரண் மற்றும் ஆஸ்திரேலியா இளம் வீரர் கேமரூன் கிரீன் ஆகியோர் மீது அதிக எதிர்பார்புகள் நிலவி வந்தது.
அதற்கேற்ப சுட்டி குழந்தையான சாம் கரணை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. மும்பை வரலாற்றில், ஒரு வீரருக்கு இவ்வளவு தொகை கொடுத்து வாங்கி இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து கேமரூன் கிரீன் கூறுகையில், “ஐபிஎல் மினி ஏலத்தில் நான் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட போது, இது கனவா அல்லது நிஜமா என்று என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோல் முதல்முறையாக எனக்காக ஐபிஎல் ஏலத்தை பார்த்தது வித்தியாசமாக இருந்தது.