
பிசிசிஐ வீரர்கள் உடல் தகுதி குறித்து வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு ஐபிஎல் அணிகளை கதி கலங்க வைத்துள்ளது. நடப்பாண்டில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.மேலும் ஐபிஎல் தொடர் முடிந்த உடனே ஒரு வாரத்தில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டம் இங்கிலாந்து நடைபெறுகிறது.
இதில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான பும்ரா, அஸ்வின், ஜடேஜா, முகமது சமி ஆகியோர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பது அவசியம். இதனை கருத்தில் கொண்டு பிசிசிஐ இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என கருதப்படும் சிலர் ஐபிஎல் போட்டிகளில் முழுமையாக விளையாட கூடாது என்பதுதான்.
சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்த வேண்டும் வீரர்களுக்கு காயம் ஏற்படும் என ஐயம் ஏற்பட்டால் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகிக் கொண்டு உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ அடுக்கடுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட போவது மும்பை அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தான். மும்பை அணியில் முக்கியமான வீரராக இருப்பவர் பும்ரா. அவரை நம்பி தான் பல கணக்குகளை அந்த அணி நிர்வாகம் செய்துள்ளது.