Advertisement

பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டோம் - டேவிட் வார்னர்!

ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் எல்லாம் மீண்டும் சிறப்பான கம் பேக்கை கொடுத்து இருக்கிறது. இதனை மையமாக வைத்து நாங்களும் பிளே ஆப்க்கு செல்வோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 15, 2023 • 20:42 PM
Cannot lose 3 wickets in powerplay, David Warner slams batters after loss vs RCB!
Cannot lose 3 wickets in powerplay, David Warner slams batters after loss vs RCB! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அந்த அணி 151 ரன்களை மட்டுமே எடுத்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஒரு வெற்றியை கூட பெறாத அணி என்ற சோகமான நிலையை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எட்டி இருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவிய டெல்லி அணி தொடரில் இருந்து வெளியேறும் அபாயத்தில் இருக்கிறது. இனி விளையாட வேண்டிய ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். 

Trending


இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், “நான் டாஸ் வீசும்போது சொன்னேன்.நாங்கள் டேட்டிங் பந்துச்சு, பில்டிங் என மூன்றிலும் சரியாக செயல்பட வேண்டும் என்று கூறினேன்.ஆனால் நாங்கள் பேட்டிங்கில் ஆரம்ப கட்டத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்த இலக்கை எளிதாக அடைந்திருக்கலாம். ஆனால் நாங்கள் மோசமாக பேட்டிங்கில் செயல்பட்டோம். 

ஆர்ச பி அணி வீரர்கள் பந்துவீச்சில் சரியாக செயல்பட்டார்கள். சிராஜ் பந்துவீச்சு பாராட்டத்தக்க வகையில் இருந்தது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. பந்துவீச்சு மற்றும் பில்டிங்கில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். களத்தில் அவர்கள் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. எங்களுக்கு ஐந்து நாட்கள் தற்போது இடைவேளை கிடைத்திருக்கிறது. இந்த நாட்களை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு அணியாக நாங்கள் என்ன தவறு செய்கிறோம்? எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து யோசிக்க உள்ளோம்.

நாங்கள் பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். பார்ட்னர்ஷிப் அமைப்பு முன் வரிசை வீரர்கள் விளையாடினால் மட்டுமே பெரிய இலக்கை எட்ட முடியும். பேட்டிங்கில் முன்வரிசை வீரர்கள் நல்ல தொடக்கத்தை அளித்தாலே இது சாத்தியமாகும். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் எல்லாம் மீண்டும் சிறப்பான கம் பேக்கை கொடுத்து இருக்கிறது. இதனை மையமாக வைத்து நாங்களும் பிளே ஆப்க்கு செல்வோம்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement