Advertisement

நான் டாசில் தவறான முடிவை எடுத்து விட்டேன் -தோல்வி குறித்து தோனி கருத்து!

போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கொல்கத்தாவுடனான தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கருத்து தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 15, 2023 • 11:53 AM
“Can’t blame any of our bowlers,” says MS Dhoni after CSK’s loss to KKR
“Can’t blame any of our bowlers,” says MS Dhoni after CSK’s loss to KKR (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை, முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சோ்த்தது. 

இதையடுத்து விளையாடிய கேகேஆர் அணி நிதிஷ் ரானா, ரிங்கு சிங் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்து வென்றது. இந்தத் தோல்வியால், பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யாமல் அதை நெருங்கிய நிலையிலேயே நிற்கிறது சென்னை. மறுபுறம் கொல்கத்தாவும் முழுமையாக போட்டியிலிருந்து வெளியேறாத நிலையில் இருக்கிறது.

Trending


இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி, “நான் டாசில் தவறான முடிவை எடுத்து விட்டேன். அதற்கு காரணம் பனிப்பொழிவு இருக்குமா இல்லையா என்று எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆடுகளம் தொய்வாக இருக்கும் என்பதற்காக நாங்கள் முதலில் பேட்டிங்கை எடுத்தோம். ஆனால் நாங்கள் பந்து வீசும் போது , இங்கு 180 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்று முதல் பந்திலேயே தெரிந்து விட்டது.

பனிபொழிவு பெரிய தாக்கத்தை இந்த ஆட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. நாங்கள் எங்கள் பந்துவீச்சாளர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. கள சூழல்தான் இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய வெற்றியை பாதிக்க வைத்து விட்டது. சிவம் துபே இன்றைய ஆட்டத்தில் நன்றாகவே செயல்பட்டார். இதில் நம் பாராட்ட வேண்டியது என்னவென்றால் தொடர்ந்து பேட்டிங்கில் முன்னேற வேண்டும் என அவர் நினைக்கிறார். தன்னுடைய பேட்டிங்கில் அவர் மன நிறைவு அடைய மாட்டேம் என்கிறார்.

அது உண்மையிலேயே நல்ல விஷயம். தீபச் சஹார் பந்தை ஸ்விங் செய்தார். எந்த பில்டிங் வேண்டும் எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவருக்கே நன்றாக தெரிந்து விடும். அதற்கு தகுந்தார் போல் தான் அவரும் பந்து வீசுவார். பேட்டிங்கில் நாங்கள் கூடுதலாக ஒரு 25 ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும்போது சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக சூழல் இருந்தது. அந்த ஆடுகளத்தில் கண்டிப்பாக 180 ரன்கள் எல்லாம் அடித்திருக்க முடியாது. இதனால் எங்கள் வீரர்கள் மீது நான் குறை சொல்ல விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement