
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்ம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 24 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறை மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்த தொடரில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் தோல்வியடைந்ததால் வென்றே தீரவேண்டும் என்ற இந்நிலையில் தனது 2ஆவது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.
பர்மிங்காம் நகரில் நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அப்போட்டி மழையால் 18 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் 18 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபத்தை சந்தித்தது. பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.