Advertisement

ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது - ஜோஸ் பட்லர்!

அனுபவ வீரர்கள் எங்களிடம் நிறைந்து இருந்தாலும் அந்த அனுபவத்திற்கு ஏற்ற செயல்பாடு எங்களிடமிருந்து வெளி வரவில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 26, 2023 • 20:14 PM
ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது - ஜோஸ் பட்லர்!
ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது - ஜோஸ் பட்லர்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்ட்டியில் இலங்கை அணியும் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது இலங்கை அணியை அதிரடியாக எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று நினைத்து முதல் 5 ஓவர்களில் போட்டியை அதிரடியாக தொடங்கினாலும், அதன் பின்னர் 7 ஆவது ஓவரில் முதல் விக்கெட்டை இழக்க அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வீரர்கள் மைதானத்திற்கு வருவதும் போவதுமாக இருந்தனர். இதன் காரணமாக 33.2 ஓவர்களில் இங்கிலாந்து அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 156 ரன்கள் மட்டுமே குவித்தது.

Trending


இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 43 ரன்களையும், பேர்ஸ்டோவ் 30 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 25.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக துவக்க வீரரான பதும் நிசாங்கா 77 ரன்களுடனும், சதீரா சமர விக்ரமா 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இப்போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர், “இந்த தோல்வி உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று. ஒரு கேப்டனாக எனக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. அதோடு எங்களது அணி வீரர்களுக்கும் இந்த தோல்வி பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கும். நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டின் பாதி அளவை கூட இந்த போட்டியில் வெளிப்படுத்தவில்லை.

அனுபவ வீரர்கள் எங்களிடம் நிறைந்து இருந்தாலும் அந்த அனுபவத்திற்கு ஏற்ற செயல்பாடு எங்களிடமிருந்து வெளி வரவில்லை. ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது. இருந்தாலும் ஒரு பதட்டமான வேளையில் இது போன்ற தோல்விகள் நடைபெறுகின்றன. எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை பகுதியளவு கூட வெளிப்படுத்த முடியாததாலே இதுபோன்ற தொடர் தோல்விகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கான காரணத்தை இதுதான் என்று சுட்டிக் காட்டுவதற்கு எதுவும் இல்லை.

எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தவில்லை அது மட்டுமே ஒரு குறையாக இருக்கிறது. மற்றபடி அணி தேர்வில் எந்த ஒரு குறையும் இல்லை. எங்களுடைய திறனுக்கு ஏற்ப நாங்கள் எங்களுடைய செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த போட்டியில் நிறைய தவறுகளை செய்து விட்டோம். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே எங்களது தரத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்படவில்லை. இனிவரும் போட்டிகளில் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement