
தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறும். சென்னையில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தொடருக்கான கோப்பையையும் ஜெர்சியையும் அறிமுகம் செய்துவைத்தார். ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவாக இருக்கும்.
இத்தொடரின் தலைமை ஸ்பான்ஸராக சாய் ராம் கல்வி நிறுவனம் மற்றும் துணை ஸ்பான்ஸர்களாக இந்தியா சிமெண்ட்ஸ், ஃபிரேயர் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் செயல்படும். 86 அணிகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 2022-23 தொடரின் போட்டிகள் சென்னை, திருச்சி, விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் நடைபெறும்.
இதுகுறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்,"முதல் முறையாக 2012ல் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் 32 அணிகள் பங்குபெறும் தொடராக சென்னையில் நடைபெற்றது. அதில் தொடங்கி தற்போது தமிழ்நாடு முழுவதும் திறமைகளை கண்டறியும் தளமாக மாறியுள்ளது. இரண்டு ஆண்டுகள் கரோனா காரணமாக நடைபெறாத தொடர் மீண்டும் நடைபெறுவது எங்களுக்கு பெருமகிழ்ச்சி.