
இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் முக்கிய தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரி நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற எலைட் குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் சர்வீசஸ் ம்ற்றும் சௌராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற சர்வீசஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய சர்வீசஸ் அணி முதல் இன்னிக்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 536 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஹிலா 153 ரன்களையும், எல் எஸ் குமார் 161 ரன்களையும், அர்ஜுன் சர்மா 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். சௌராஷ்டிரா அணி தரப்பில் அதிகபட்சமாக டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பார்த் பட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணி போட்டியின் முடிவில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ரன்களைச் சேர்த்திருந்தது. இதில் அதிகபட்சமாக சட்டேஷ்வர் புஜாரா 91 ரன்களையும், விஷ்வராஜ் ஜடேஜா 88 ரன்களையும், அர்பித் வசவாதா 71 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் சர்வீசஸ் - சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.