
Congratulations Sri Lanka for reaching in Asia cup final 2022 (Image Source: Google)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் எட்டாவது சீசன் வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து அணிகள் முன்னேறின.
அதன்படி இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.