சிபிஎல் 2021: பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்த பர்போடாஸ் ராயல்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் பார்போடாஸ் ராயல்ஸ் - கயானா ஆமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்ற வாரியர்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் - சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. அதன்பின் இறுதியில் கிளென் பிலீப்ஸ் தனது பங்கிற்கு 44 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 44, சார்லஸ் 40 ரன்களை எடுத்தனர்.
பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வாரியர்ஸ் அணிக்கு இம்முறையும் தொடக்க வீரர்கள் ஏமாற்றமளித்தனர். இருப்பினும் இறுதிவரை போராடிய ஒடியன் ஸ்மித் 43 ரன்களை சேர்த்தார்.
Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!
ஆனாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 17.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பார்போடாஸ் ராயல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்தது.
Win Big, Make Your Cricket Tales Now