Advertisement

நான் சிறப்பாக செயல்பட காரணம் சிஎஸ்கேவும், தோனியும் தான் - ஷிவம் தூபே!

சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை போல் தான் தற்போது இந்திய அணிக்காகவும் விளையாடுகிறேன் என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 15, 2024 • 15:27 PM
நான் சிறப்பாக செயல்பட காரணம் சிஎஸ்கேவும், தோனியும் தான் - ஷிவம் தூபே!
நான் சிறப்பாக செயல்பட காரணம் சிஎஸ்கேவும், தோனியும் தான் - ஷிவம் தூபே! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. மேலும் இந்த இரு போட்டிகளிலும் இந்திய வீரர் ஷிவம் தூபே அரைசதம் அடித்ததுடன், பந்துவீச்சிலும் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றியில் பங்காற்றியுள்ளார். 

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ஷிவம் தூபே, “இவ்வாறு சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி மற்றும் தோனி தான். என்னிடம் எப்போதுமே இது போல் அதிரடியாக ஆடக்கூடிய திறமை இருக்கிறது. ஆனால் என்னிடமிருந்து அதை வெளிக்கொண்டு வந்து என்னை சிறந்த வீரராக உருவாக்கியது சிஎஸ்கே வின் செயல் தான். கிரிக்கெட்டில் தேவைப்படக்கூடிய அனைத்தையும் எனக்கு சிஎஸ்கே தான் வழங்கியது. 

Trending


அவர்கள் தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார்கள். இதோ பார் ஷிவம் துபே, உன்னால் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்க முடியும். கவலைப்படாதே உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். தோனி மட்டுமல்லாமல் மைக்கேல் ஹசி, பிளமிங் போன்றோர் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். 

அது எப்போதுமே என் மனதில் இருக்கும். சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை போல் தான் தற்போது இந்திய அணிக்காகவும் விளையாடுகிறேன். என் மீது ரோஹித் சர்மா நம்பிக்கை வைத்து எனக்கான பொறுப்பை வழங்கினார். சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அதிரடியாக ஆட வேண்டும் என்பதுதான் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement