Advertisement

ரிஷப் பந்தை பாராட்டிய முன்னாள் ஜாம்பவான்கள் !

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்த ரிஷப் பந்திற்கு முன்னாள் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 02, 2022 • 11:05 AM
Cricketing Legends Astounded After Rishabh Pant's Valor In The Fifth Test Against England
Cricketing Legends Astounded After Rishabh Pant's Valor In The Fifth Test Against England (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 73 ஓவர்களில் விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்துள்ளது.

இந்திய அணி முதல் நாள் ஆட்டத்திலேயே 338 ரன்களை குவித்துள்ளதால் இன்று மேலும் ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணியை அழுத்தத்திற்குள் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending


இந்நிலையில் இந்த முதல் இன்னிங்சின் போது இந்திய அணி முதல் நாளில் அதிரடியாக ரன்களை குவித்தாலும் துவக்கம் சரியாக இல்லை என்றே கூறலாம். ஏனெனில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் 17 ரன்களும், புஜாரா 13 ரன்களும், விகாரி 20 ரன்களும், விராட் கோலி 11 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 15 ரன்களில் வெளியேறியதால் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஆறாவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா ஆகியோரது கூட்டணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜடேஜா 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வரும் வேளையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 111 பந்துகளை சந்தித்து 20 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 146 ரன்கள் குவித்து அதிரடியில் பின்னி எடுத்தார்.

அவரது இந்த அபாரமான அதிரடி ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு தற்போது முதல் இன்னிங்சில் அழுத்தத்தை கொடுத்துள்ளது என்று கூறவேண்டும். இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக சதம் அடித்த ரிஷப் பந்த் இந்திய விக்கெட் கீப்பர்களில் யாரும் செய்யாத ஒரு பிரமாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

அதன்படி ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் சதங்களை விளாசிய நான்காவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் பெற்றார். இதற்கு முன்னதாக இந்திய அணிக்காக ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் சதங்களை விளாசியவர்களாக தோனி, சஹா ஆகியோர் உள்ளனர்.

அதோடு இதுவரை ஆசிய கண்டத்தை தாண்டி வெளியில் இந்திய விக்கெட் கீப்பர்கள் அனைவரும் சேர்ந்து மூன்று சதங்களை மட்டுமே விளாசி உள்ளனர். அதில் (விரிதிமான் சஹா, அஜய் ராத்ரா, விஜய் மஞ்சரேக்கர்) என மூன்று சதங்கள் மட்டுமே ஆசிய கண்டத்திற்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளன. 

அதில் தற்போது 4 சதங்களை விளாசி ரிஷப் பந்த் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதையாடுத்து ரிஷப் பந்தின் இந்த அதிரடியான ஆட்டத்திற்கு வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மைக்கேல் வாகன் உள்ளீட்ட முன்னாள் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement