Advertisement
Advertisement
Advertisement

ENG vs PAK: எட்ஜ்பாஸ்டனில் 80 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!

எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 80 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 29, 2021 • 11:38 AM
Crowd Capacity Increased To 80 Percent For England-Pakistan Edgbaston ODI
Crowd Capacity Increased To 80 Percent For England-Pakistan Edgbaston ODI (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக பாபர் அசாம் தலைமையிலான 24 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டு, இன்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து செல்லவுள்ளது. 

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவார கால தனிமைப்படுத்துதலுக்கு பிறகு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர். 

Trending


இதற்கிடையில் இங்கிலாந்தில் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், எட்ஜ்பாஸ்ட்னில் நடைபெறவுள்ள இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 80 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வார்விக்ஷையர் கிரிக்கெட் கிளப் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானம் அரசின் பாதுகாப்பு நிறைந்த ஒரு பகுதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டியில் 80 விழுக்காடு பார்வையாளர்களைக் கொண்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே இங்கிலாந்தில் இம்மாதம் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளுக்கு 4ஆயிரம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement