
CSK announces ₹1 crore to Neeraj Chopra (Image Source: Google)
டோக்கியோவில் நடைபெற்று வரும் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
அதிலும் தற்போது ராணுவத்தில் இளநிலை அதிகாரியாக உள்ள நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் சிறப்பாக செயல்பட்டு இறுதிச்சுற்று வரை முன்னேறி தற்போது இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவுக்காக முதல் தங்கத்தையும் பெற்று தந்துள்ளார்.
இதன் காரணமாக அவருக்கு இந்தியா முழுவதிலுமிருந்து பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, காவல் அதிகாரிகள், பல தலைவர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர், விளையாட்டுத் துறையினர் என அனைத்து தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்திய மக்களாலும் தற்போது நீரஜ் சோப்ரா வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார்.