Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: குடும்பத்துடன் சென்னை வந்தடைந்த ‘தல’ தோனி!

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்துடன் இன்று சென்னை வந்தவடைந்தார்.

Advertisement
CSK Captain Dhoni has arrived in Chennai for the 2nd Phase of IPL 2021
CSK Captain Dhoni has arrived in Chennai for the 2nd Phase of IPL 2021 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 10, 2021 • 09:44 AM

இந்தியாவில் நடப்பாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் அடுத்து, 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 10, 2021 • 09:44 AM

பின் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று அறிவித்து, இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ அறிவித்தது. 

Trending

இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரின் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக்கத்திற்கு செல்லவுள்ளது. 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இத்தொடரில் பங்கேற்பதற்காக மனைவி ஷாக்ஸி, குழந்தை ஸிவா ஆகியோருடன் இன்று சென்னை வந்தடைந்தார். 

சென்னை விமானநிலையில் தோனியை குடும்பத்துடன் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று, புகைப்படங்களையும், காணொளிகளையும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவுசெய்துள்ளது. அப்பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. 

 

கடந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருவதால் அவரை மீண்டும் இந்திய ஜெர்சியில் காணமுடியாமல் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement