
CSK CEO confirms MS Dhoni will play IPL for another 1 or 2 years (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டைத் தவிர மற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களில் அணியை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு அழைத்து சென்ற பெருமை தோனிக்கு உண்டு. இதுவரை 3 முறை ஐ.பி.எல். கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்.தோனி, தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் தோனியின் அதிரடியை காணமுடியவில்லை. எனவே, அவர் இந்தாண்டு ஓய்வை அறிவிப்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை அணிக்காக தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.