
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடரின் முதல் போட்டி வரும் சனிக்கிழமை ( மார்ச் 26 ) நடைபெறவுள்ளது. கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் மோதிய சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் தான் இந்தாண்டின் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக கூட இருக்கலாம். தனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட போதும், கரோனா அதனை நிறைவேற விடவில்லை. இதனால் இந்தாண்டு சிஎஸ்கேவுக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துவிட்டு, தோனி வெளியேறுவார் எனத்தெரிகிறது.
இந்த சூழலில் தான் சிஎஸ்கேவுக்கு தொடக்கமே பின்னடைவாக சென்றது. தீபக் சஹார் மீது அதீத நம்பிக்கை வைத்து ரூ.14 கோடிக்கு எடுக்கச்சொன்னார் தோனி. ஆனால் காயம் காரணமாக அவரால் முதல் பாதி தொடரில் விளையாட முடியாது என அறிவிப்பு வெளியானது. கடந்த 2 சீசனாக பவர் ப்ளேவில் மட்டும் 32 விக்கெட்களை எடுத்து, எந்த பவுலரும் நெருங்க முடியாத உச்சத்தில் சஹார் உள்ளார். அவருக்கு மாற்று வீரரை முதலில் தேடினார்.