
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா – சென்னை சூப்பர்கிங்ஸ் அணி புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் கெய்க்வாட், கான்வே, ரஹானே, துபே, ஜடேஜா ஆகியோர் அதிரடியால் சென்னை அணி முதலில் பேட் செய்து 235 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியின் வீரர்கள் ஜெகதீசன், சுனில் நரைன், வெங்கடேஷ் அய்யர் சொதப்பினாலும் ஜேசன் ராய், ரிங்குசிங் அதிரடியில் மிரட்டினர். இருப்பினும், அவர்கள் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
இந்த போட்டிக்கு பிறகான புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் தலா 1 இடம் கீழ் இறங்கியுள்ளது. சென்னை அணி தற்போது 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை முன்னேறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.