
ஐபிஎல் 154ஆவது சீசனுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேத்தேஸ்வர் புஜாராவை ஏலம் எடுத்திருந்தது. டெஸ்ட் வீரரை ஏலம் எடுத்ததை பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில், ஓபனருக்கான இடத்திற்கு ஜேசன் ராய், குவின்டன் டி காக் போன்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, நியூசிலாந்து வீரர் டேவன் கான்வேவை, சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, புஜாராவுக்கு மாற்றாக கான்வே வந்துள்ளார் என பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. சமீப காலமாகவே அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே அதிகம் தலைகாட்டி வருகிறார். கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு, நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்றபோது கான்வே அறிமுக வீரராக களமிறங்கி, இரட்டை சதம் அடித்து தனது இடத்தை உறுதி செய்தார்.
இதனால், லண்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கான்வே நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக இருந்தார். இருப்பினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன்பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இருக்கிறார். இதுவரை மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 63.9 சாரசரியுடன் 767 ரன்களை குவித்துள்ளார்.