Chennai super kings schedule
ஐபிஎல் 2022: கேப்டன்சியிலிருந்து விலகிய தோனிக்கு விராட் கோலி வாழ்த்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாக விளங்கிய தோனி, தற்போது கேப்டனாக தனது இறுதி முடிவுரையை எழுதிவிட்டார். ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தோனி எடுத்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் ஏலம் முதல் முறையாக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ஆறரை கோடி ரூபாய் கொடுத்து தோனியை ஒப்பந்தம் செய்தது. அதற்கு ஏற்றார் போல் தோனி முதல் சீசனிலேயே இறுதிப் போட்டி வரை சிஎஸ்கே அணியை அழைத்து சென்றார்.