
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரஜாஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ரன்களை அடித்தார். பந்துவீச்சில் டிரென்ட் போல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சிறப்பாக தொடங்கினாலு, ஷாபாஸ் அஹ்மத் மற்றும் அபிஷேக் சர்மாவின் எதிர்பாராத திருப்பத்தின் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் துருவ் ஜுரெல் இறுதிவரை போராடிய நிலையிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழ்னது 139 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
ஹைதராபாத் அணி தரப்பில் ஷபாஸ் அஹ்மத், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷாபாஸ் அஹ்மத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.