
ஆசியக் கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு தற்போதுவரை ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகள் தகுதிபெற்றுவிட்டன. நாளை பாகிஸ்தான் அணியும் தகுதிபெற அதிக வாய்ப்புள்ளது. மற்றொரு இடத்திற்கு இலங்கை, வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கடந்த முறை ஆசியக் கோப்பை நடைபெற்றபோது அரையிறுதியில் இலங்கை அணியை வங்கதேச அணி வீழ்த்திய நிலையில் அந்த அணி வீரர்கள், ரசிகர்கள் பாம்பு டான்ஸ் ஆடி இலங்கை அணியை சூடேற்றினர். இதனால், அதிருப்தியடைந்த இலங்கை ரசிகர்கள் இந்தியா, வங்கதேச இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
மேலும், இந்த மோதல் போக்கு இத்தொடு முடிந்துவிடவில்லை. இருதரப்பு தொடர்களின்போதும் இரு நாட்டு ரசிகர்கள் கொந்தளிப்போடு இருந்தார்கள். வீரர்களும் ஆக்ரோஷத்தோடு விளையாடினார்கள். குறிப்பாக அந்தக்கால இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் போலதான் இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன.