
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி விராட் கோலி, மஹிபால் லோமரோர் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. இதியடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிலிப் சால்ட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றிபெற்றது .
இந்த வெற்றி குறித்து பேசிய டேவிட் வார்னர், “ஆர்சிபி அணி சராசரிக்கும் அதிகமான ரன்களை இலக்காக நிர்ணயித்துவிட்டது என்று நினைத்தோம். ஆனால் பந்து அதிகமாகவே வழுக்கியது. அதேபோல் சால்ட் அதிரடி டெல்லி அணியின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுத்தது. முகமது சிராஜ் பந்துவீச்சில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் திட்டமாக இருந்தது.