Advertisement
Advertisement
Advertisement

ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தியான்ட்ரா டாட்டின்; விண்டீஸ் அணியில் இடம் கிடைக்குமா?

எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தியான்ட்ரா டாட்டின் தற்போது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார்.

Advertisement
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தியான்ட்ரா டாட்டின்; விண்டீஸ் அணியில் இடம் கிடைக்குமா?
ஓய்வு முடிவை திரும்பப்பெற்றார் தியான்ட்ரா டாட்டின்; விண்டீஸ் அணியில் இடம் கிடைக்குமா? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 28, 2024 • 04:28 PM

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 03ஆம் தேதி முதல் நடைபெறும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 28, 2024 • 04:28 PM

இந்நிலையில் வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் மற்றும் போட்டியை அட்டவணையை ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் இடம்பிடித்துள்ளன. அதேபோல் குரூப் பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த ஸ்காட்லாந்து அணியும் இடம்பிடித்துள்ளன.

Trending

இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு குரூப்பில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது அக்டோபர் 06ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே கடந்த 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டது. இதனால் இந்த முறை இந்திய அணி கோப்பையை வென்று சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் இத்தொடருக்காக மற்ற அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸும் தீவிர தயாரிப்பில் இறங்கியுள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் விதமாக தியான்ட்ரா டாட்டின் தனது ஓய்வு முடிவை திரும்பப்பேற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டாட்டின் கடந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேலும் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரான தியான்ட்ரா டாட்டின், எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை கணக்கில் கொண்டு அவர் தற்போது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். இவரது வருகையானது நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement