
பெர்த் நகரில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பெர்த் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் ஆகும். இதனால் இந்திய அணி தனது பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக அக்சர் பட்டேலை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை பிளேயிங் லெவனில் சேர்த்தது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் பிளேயிங் லெவன் முடிவு தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கம்பீர், “இந்திய அணியின் பிளேயிங் லெவனை பார்க்கும போது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. 2 போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், எதற்காக அணியை மாற்றினார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் கடந்த போட்டியில் தான் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசி கொடுத்து இருக்கிறார்.