
டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான படுதோல்வி, இந்திய அணியை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, அந்த அழுத்தத்திலேயே சரியாக ஆடாமல் படுதோல்வி அடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. களத்தில் இந்திய அணியின் உடல்மொழியே சரியில்லை என்பதை கேப்டன் விராட் கோலியே போட்டிக்கு பின்னர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கு பின்னர், மனிதத்தன்மையற்ற செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியை அடுத்து, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பத்து மாத பெண் குழந்தை வாமிகாவுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.