Advertisement

ஐபிஎல் 2022: டெல்லி வீரருக்கு கரோனா - தகவல்!

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 18, 2022 • 13:21 PM
Delhi Capitals Squad Under Quarantine After A Player Tests Covid Positive: Report
Delhi Capitals Squad Under Quarantine After A Player Tests Covid Positive: Report (Image Source: Google)
Advertisement

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, வரும் புதன் அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக புணேவில் விளையாடவுள்ளது. இன்று புணேவுக்கு டெல்லொ அணி வீரர்கள் செல்வதாக இருந்த நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் தற்போது தில்லி வீரர் ஒருவரும் ரேபிட் ஆண்டிஜெட்ன் பரிசோதனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

Trending


இதையடுத்து அவருக்கு ஆர்டி - பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளைக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது தில்லி அணி. 

இதனால் தற்போது டெல்லி வீரர்கள் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். பயிற்சியும் ரத்தாகியுள்ளது. 

கடந்த சனியன்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியது டெல்லி. அப்போது ஆட்டம் முடிந்த பிறகு தில்லி வீரர்கள் மைதானத்துக்குள் வராமல் அவர்களுடைய இடங்களிலேயே அமர்ந்துகொண்டார்கள். தற்போதைய சூழலால் ஐபிஎல் 2022 போட்டிக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement