Advertisement

தியோதர் கோப்பை: சாய் சுதர்ஷன் அபார சதம்; வெற்றி பாதையில் தெற்கு மாண்டலம்!

மத்திய மண்டல அணிக்கெதிரான தியோதர் கோப்பை தொடரில் தெற்கு மண்டல அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 02, 2023 • 12:34 PM
தியோதர் கோப்பை: சாய் சுதர்ஷன் அபார சதம்; வெற்றி பாதையில் தெற்கு மாண்டலம்!
தியோதர் கோப்பை: சாய் சுதர்ஷன் அபார சதம்; வெற்றி பாதையில் தெற்கு மாண்டலம்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவின் பிரபலமான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான தியோதார் கோப்பை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த ஜூலை 24 முதல் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த இந்த தொடரில் மயங் அகர்வால் தலைமையில் அசத்தி வந்த தெற்கு மண்டல அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் மத்திய மண்டலத்தை எதிர்கொண்டது.

நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மத்திய மண்டலம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்க வீரர் மாதவ் கௌசிக் தடுமாறி 6 ரன்களில் அவுட்டாக மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த சிவம் சௌத்ரியும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Trending


அதை தொடர்ந்து வந்த யாஸ் துபே 77 ரன்கள் எடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் உபேந்திரா யாதவ் 26, ரிங்கு சிங் 26, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் தெற்கு மண்டலத்தின் சிறப்பான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இதன்மூலம் 50 ஓவர்களில் மத்திய மண்டல அணி 9 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து 262 ரன்களை துரத்திய தெற்கு மண்டல அணிக்கு கேப்டன் மயங் அகர்வால் ஆரம்பத்திலேயே காயமடைந்ததால் களமிறங்காத நிலையில் ரோகன் குன்னும்மாள் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் குன்னம்மாள் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நாராயன் ஜெகதீசன் 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அரை சதமடித்து வெற்றிக்கு போராடி சுதர்சனுடன் எதிர்ப்புறம் ஜோடி சேர்ந்து 3ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரோஹித் ராயுடு 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்த சுதர்சன் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று எதிரணி பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு தன்னுடைய 5ஆவது சதத்தை பதிவு செய்தார்.

அப்போது பெவிலியனிலிருந்த கேப்டன் மயங் அகர்வால் சல்யூட் அடித்து பாராட்டு கொடுத்த உற்சாகத்துடன் தொடர்ந்து அசத்திய சுதர்சன் கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 132 ரன்கள் குவித்தார். அவருடன் வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு 43 ரன்கள் எடுத்ததால் 48.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய மண்டல அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

இதன்மூலம் வாயிலாக இந்த தொடரில் பங்கேற்ற 5 லீக் போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்த தெற்கு மண்டலம் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் 2ஆவது இடம் பிடித்த கிழக்கு மண்டல அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement