Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: பிரித்வி ஷா உடல் நலம் குறித்து பேசிய ரிஷப் பந்த்!

உடல் நலக்குறைவால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிருத்வி ஷா விளையாடவில்லை என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 12, 2022 • 12:26 PM
Destiny is always in your hands, you can look to give 100 percent: Rishabh Pant
Destiny is always in your hands, you can look to give 100 percent: Rishabh Pant (Image Source: Google)
Advertisement

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி அணி. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. 

அஸ்வின் 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார். இதன்பிறகு விளையாடிய தில்லி அணி, 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் 89, வார்னர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார்கள்.

Trending


மே 1 அன்று கடைசியாக லக்னெளவுக்கு எதிராக விளையாடினார் டெல்லி வீரர் பிருத்வி ஷா. அதன்பிறகு அவர் மீண்டும் விளையாடவில்லை. 

இதுபற்றி டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், “இந்த ஆட்டத்தில் பிருத்வி ஷாவின் பங்களிப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த நிலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு டைபாயிடோ அல்லது வேறு ஏதோவொரு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள் என்றார். 

மேலும் அணியின் வெற்றி பற்றி அவர் கூறியதாவது: நாங்கள் முதலில் பந்துவீசியது மகிழ்ச்சியளித்தது. 140-160 ரன்கள் நல்ல ஸ்கோர். அதை நாங்கள் அடைந்துவிட்டோம். ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இது எங்களுக்கு மிகச்சிறப்பான ஆட்டமாக அமைந்துவிட்டது” என்று தெரிவித்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement