Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Prithvi shaw

மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; பந்தை பிடித்தாரா நூர் அஹ்மத்? - காணொளி!
Image Source: Google

மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; பந்தை பிடித்தாரா நூர் அஹ்மத்? - காணொளி!

By Bharathi Kannan April 24, 2024 • 20:31 PM View: 52

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் டேவிட் வார்னர், லலித் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் முயற்சியில் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசினர். இதையடுத்து இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை சந்தீப் வாரியம் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஃபிரேசர் மெக்குர்க் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார். 

Related Cricket News on Prithvi shaw