
Dhoni helped my career personally, we have great legacy at CSK: Dwayne Bravo (Image Source: Google)
கடந்த 2020ஆம் ஆண்டு யாருமே எதிர்பாராத வகையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த ஒரு சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எப்பொழுதுமே மாஸ் காட்டும் சென்னை அணி 2020ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம், அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் வயது முதிர்ந்தவர்களாக உள்ளது தான் என்ற சர்ச்சையான கருத்தும் கிரிக்கெட் வட்டாரத்தில் உலவி வந்தது.
குறிப்பாக சென்னை அணியில் ரவீந்திர, ஜடேஜா மஹேந்திரசிங் தோனி, டுவைன் பிராவோ, டுப்லஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா போன்ற முக்கியமான வீரர்கள் 30 வயது கடந்தவர்கள், வயதாகிவிட்டதால் இவர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று பெரும்பாலானவர்கள் பேசி வந்தனர்.