தோனியின் நம்பிக்கையைப் பெற்றது என்னுடைய அதிர்ஷ்டம் - ருதுராஜ் கெய்க்வாட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியை மகேந்திர சிங் தோனி தன்னிடம் ஒப்படைத்த தருணத்தை ருதுராஜ் கெய்க்வாட் நினைவு கூர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை மீண்டும் ஒரு கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது.
Trending
இந்நிலையில் இம்முறை கெய்க்வாட் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இனி அணியை வழிநடத்தப் போவதில்லை என்று அறிவித்து, தன்னிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த தருணத்தை ருதுராஜ் கெய்க்வாட் நினைவு கூர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எம்எஸ் தோனி என்னிடம் வந்து, ‘இந்த ஆண்டு நான் அணியின் கேப்டனாக இருக்க போவதில்லை - நீங்கள் தான் அணியின் கேப்டன்’ என்றார். நான் அதிர்ச்சியடைந்து, ‘முதல் ஆட்டத்திலிருந்தேவா? அதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டேன். ஏனெனில் தொடருக்கு தயாராக சில நாட்கள் மட்டுமே இருந்ததால், அது மிகப்பெரியதாக இருந்தது.
ஆனால் அவர் எனக்கு உறுதியளித்தார், ‘இது உங்கள் குழு. நீங்களே முடிவுகளை எடுங்கள். ஃபீல்டிங்கில் மட்டும் தேவைப்படும்போது தவிர ஆலோசனை வழங்குவேன், அதுதவிர்த்து உங்களுடைய கேப்டசியில் நான் தலையிட மாட்டேன். அப்படியிருந்தும், என் ஆலோசனையைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என்று கூறினார். அவரது அந்த நம்பிக்கை எனக்கு நிறைய அர்த்தத்தை அளித்தது” என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் தங்களின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்றுள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
Win Big, Make Your Cricket Tales Now