Advertisement

நான் நன்றாக விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணம் - தினேஷ் கார்த்திக்!

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போதைக்கு டி20 உலகக்கோப்பை குறித்து எல்லாம் நான் யோசிக்கவில்லை என்று ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 20, 2022 • 22:33 PM
 Dinesh Karthik Is Unconcerned About His Selection For The World Cup Squad
Dinesh Karthik Is Unconcerned About His Selection For The World Cup Squad (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட்டருமான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தாலும் வெகு விரைவிலேயே தோனி போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வந்த பிறகு தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது.

ஆனால் எப்போதெல்லாம் மற்ற வீரர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைத்ததோ, அப்போதெல்லாம் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக தினேஷ் கார்த்திக் விளையாடி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தினேஷ் கார்த்திக் அந்த தொடருக்கு பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

Trending


ஆனால் நிச்சயம் மீண்டு வந்து இந்திய அணிக்காக குறைந்தது இரண்டு டி20 உலக கோப்பையில் விளையாடுவேன் என்ற சபதம் எடுத்துகொண்ட தினேஷ் கார்த்திக் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அந்த பிரமாதமான ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இருந்து அவரை ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டு தற்போது மீண்டும் டி20 அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 

இதன் காரணமாக நிச்சயம் எதிர்வரும் டி20 உலக கோப்பையில் அவர் விளையாடுவார் என்று பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 37 வயதாகும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தற்போதைக்கு டி20 உலகக்கோப்பை குறித்து எல்லாம் நான் யோசிக்கவில்லை என்று ஒரு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், “எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஏற்படும் சவால்களை சரியாக எதிர்கொள்ளும் வகையில் தற்போது இந்திய அணியை தயார்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இனி வரும் அனைத்து தொடர்களிலும் தகுந்த வீரர்களைக் கொண்டு முன்னேற்பாடுகளுடன் இந்திய அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது.

அதேபோன்று பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஆகியோர் இந்த உலகக் கோப்பை தொடருக்காக சரியான வகையில் அணியை தயார் செய்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் அணியை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதை புரிந்து சரியாக கட்டமைத்து வருகின்றனர். ஆனால் என்னுடைய கவனமெல்லாம் தற்போது உலகக்கோப்பை தொடரில் தேர்வாக வேண்டும் என்பதைப் பற்றி அல்ல.

நான் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில், நான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டும் என்பது பற்றி மட்டும்தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன்” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement