3-mdl.jpg)
நேற்று ஆசிய கோப்பை இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டி 24.1 ஓவர் வீசி இருக்கும் பொழுது மழையின் காரணமாக நிறுத்தப்பட்டு, இன்றைய நாளுக்கு தொடர்கிறது. நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாசை தோற்றார். ஆனால் பேட்டிங் இன்டெண்ட்டை அவர்கள் தோற்காமல் இருந்தார்கள்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம் நேற்று பாகிஸ்தானின் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சுக்கு எதிராக வெளிப்பட்டது. புதிய பந்தில் மிகவும் அபாயகரமானவரான ஷாகின் சா அப்ரிடி வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா சிக்சர் விளாசினார். இதற்கு அடுத்து இளம் வீரர் ஷுப்மன் கில் அதிரடிக்கு பொறுப்பை எடுத்து, பாகிஸ்தானின் எல்லா வேகப்பந்துவீச்சாளர்களையும் விரட்டினார்.
பவர் பிளே முடியும் வரை பொறுமை காட்டிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சதாப் கான் வந்ததும், அதிரடியில் இரண்டு மடங்காகி நொறுக்கினார். இந்த ஜோடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தது. ரோஹித் சர்மா 49 பந்தில் 56 ரன்கள், கில் 52 பந்தில் 58 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவிற்கு நல்ல துவக்கம் கிடைத்ததோடு, தொடர்ந்து இந்த தொடரில் உற்சாகமாக விளையாட நல்ல மனநிலையும் இந்த ஆட்டத்தால் கிடைத்திருக்கிறது!