
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி ஏகப்பட்ட விமர்சனங்களையும் சந்தித்தது.
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் இந்திய அணியானது இம்முறை கட்டாயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது மிகப்பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்திய அணி பெற்ற இந்த தோல்விக்கு அணியில் உள்ள வீரர்களை சரியாக தேர்ந்தெடுக்காததும், பிளேயிங் லெவனில் முறைப்படி வீரர்களை விளையாட வைக்காததுமே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்த தொடரில் ஒரு சில வீரர்களை எடுத்துவிட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காததும் மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.