Advertisement

இந்திய அணியின் தொடக்க வீரர்களை எச்சரிக்கும் தினேஷ் கார்த்திக்!

வங்கதேச அணியுடனான போட்டியில் இஷானின் அதிரடியை பார்த்த தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 10, 2022 • 23:21 PM
Dinesh Karthik warns Indian openers after Ishan Kishan's record-breaking double ODI ton
Dinesh Karthik warns Indian openers after Ishan Kishan's record-breaking double ODI ton (Image Source: Google)
Advertisement

இந்தியா - வங்கதேச அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி சட்டாகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 409 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வங்கதேச அணி 34 ஓவர்களில் 182 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த போட்டியில் இளம் வீரர் இஷான் கிஷான் ஆடிய ருத்ரதாண்டவம் கிரிக்கெட் ரசிகர்களை வாயைப் பிளக்கவைத்துள்ளது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய அவர் 131 பந்துகளில் 210 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போல இரட்டை சதம் அடித்த 4ஆவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

Trending


இந்நிலையில் இஷான் கிஷானின் ஆட்டம் குறித்து சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “முதல் 5 ஓவர்களுக்கு பின்னர் இஷான் கிஷான் தனது இன்னிங்ஸை வேகப்படுத்திய விதம் மிகவும் அழகாக இருந்தது. அவரின் ஷாட்களும், பவுலர்களை தொடர்ச்சியாக அடித்துக்கொண்டே இருந்த விதமும் அவ்வளவு சிறப்பாக இருந்தது.

இஷான் கிஷானின் இரட்டை சதத்தின் சிறப்பம்சமே ஸ்ட்ரைக் ரேட் தான். 160 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரட்டை சதத்தை அவர் பூர்த்தி செய்தார். அவரின் 2வது சதம் வெறும் 41 பந்துகளில் வந்தவை. இதனால் தான் அவரை அவ்வளவு பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. சிறப்பான முடிவுகளை தரக்கூடிய வீரராக இஷான் கிஷான் உருவெடுத்துள்ளார்.

தற்போதைய நிலையை வைத்து பார்த்தால் நிறைய புறாக்களுக்கு மத்தியில் ஒரு பெரிய பூணை உள்ளது போன்று இருக்கிறார். குறிப்பாக ஓப்பனிங் இடத்திற்கு இதனை கூறுகிறேன்” என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

அதாவது ஓப்பனிங் இடத்திற்கு கேஎல் ராகுல், சுப்மன் கில், ஷிகர் தவான், சஞ்சு சாம்சன் என பல வீரர்கள் போட்டிப்போட்டு வருகின்றனர். ஆனால் அவர்களையெல்லாம் முந்தி இஷான் முதன்மை தேர்வாக நின்றுள்ளார் என தினேஷ் கார்த்திக் எச்சரித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement