Advertisement
Advertisement
Advertisement

எங்களால் வெற்றி இலக்கை தொட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - பேரி மெக்கர்த்தி!

அணிக்காக பங்களிப்பை கொடுப்பது நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கடைசியில் எங்களால் வெற்றி இலக்கை தொட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது என அயர்லாந்து அணியின் ஆல் ரவுண்டர் பேரி மெக்கர்த்தி தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 19, 2023 • 12:38 PM
எங்களால் வெற்றி இலக்கை தொட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - பேரி மெக்கர்த்தி!
எங்களால் வெற்றி இலக்கை தொட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - பேரி மெக்கர்த்தி! (Image Source: Google)
Advertisement

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனால் அயர்லாந்து அணியை 100 ரன்களில் சுருட்டி விடலாம் என நினைத்த பும்ராவுக்கு அந்த அணியின் கீழ் வரிசை வீரர் பேரி மெக்கார்த்தி தக்க பதிலடி கொடுத்தார்.

யாருமே எதிர்பார்க்காத வகையில் மெக்கார்த்தி அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசபட்டது. இதனால் அயர்லாந்த அணி 139 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. அதன்பின் இந்திய அணி விளையாடிய நிலையில் மழை குறுக்கிட்டத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Trending


இதற்கு காரணமாக இருந்த பேரி மெக்கார்த்தி மழையால் இந்தியா வெற்றி பெற்றது குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், “அணிக்காக பங்களிப்பை கொடுப்பது நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் கடைசியில் எங்களால் வெற்றி இலக்கை தொட முடியாதது மிகவும் ஏமாற்றத்தை கொடுக்கிறது.

நானும் கேம்பரும் அதிரடியாக விளையாட கூடியவர்கள். நாங்கள் இருவரும் கடைசிவரை பாசிட்டிவாக இருக்க வேண்டும் என நினைத்தோம். எங்களால் ஒரு கௌரவமான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்க முடியும் என்று நம்பினோம். நேர்மறையான எண்ணங்களுடன் விளையாடினால் மட்டுமே உங்களுக்கு ரன்களை பெற்றுத் தர முடியும். இது போன்ற கட்டத்தில் எப்போதுமே எதிரணியை தாக்கும் வகையில் விளையாட வேண்டும்.

நான் பேட்டிங்கில் எந்த வரிசையில் விளையாடினாலும் சரி அணியின் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை என்னுடைய நோக்கம் என்று மெக்கார்த்தி கூறினார்.பேரி மெக்கார்த்தி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடியதால் தான் டக்வோர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருவேளை இந்திய அணி கூடுதலாக ஒரு விக்கெட்டை இழந்து இருந்தால் இந்நேரம் இந்திய அணிக்கு எதிராக முதல் டி20 வெற்றியை அயர்லாந்து அணி பதிவு செய்து வரலாற்றைப் படைத்திருக்கும். இந்த போட்டியில் இந்திய அணி மழை பெய்யாமல் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருக்க கூடும். ஆனால் மழை பெய்தும் இந்தியா வெற்றி பெற்றிருப்பது அதிர்ஷ்டம் மட்டும் தான்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement