
அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடர்களின் இந்தியாவில் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான ஏலம் மட்டும் தற்போது நடைபெற்றது. இதர ஆசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான ஏலம் பிறகு நடத்தப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடரின் உரிமம்தை ஸ்டார் நிறுவனம் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வாங்கியது. ஆனால் இம்முறை இந்தியாவிற்கான ஒளிபரப்பு உரிமைக்கான மட்டும் எலம் என்பதால், 12 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஏலத்தின் முதல் சுற்று பாரம்பரிய முறைப்படி சீல் போட்ட கவரில் ஏலத்திற்கான தொகையை கோரப்பட்டது. இதில், ஐசிசி ஒரு டிவிஸ்ட் வைத்தது.
அதாவது, ஏலத்தை வென்றவருக்கும், 2ஆம் இடம் பிடித்தவர்களுக்கும் ஏலம் கேட்ட தொகையில் 10 சதவீதம் மட்டும் தான் இடைவெளி இருந்தால், அடுத்த சுற்று ஏலம் இணைய வாயிலாக நடத்தப்படும் என அறிவித்தது. இந்த நிலையில், அடுத்த 4 ஆண்டுக்கான ஐசிசி தொடர்களை ஸ்டார் டிஸ்னி நிறுவனம் 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வென்றுள்ளது.